கர்ப்போட்டம் குறிப்பு மற்றும் கணிப்புக்காக உருவாக்கப்பட்ட தளம் sidhariyal.org
தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும்
sidhariyal.org என்பது கர்ப்போட்டம் குறிப்பு மற்றும் கணிப்பு, சித்தர் இயல் நாட்காட்டி மற்றும் பாரம்பரிய கால கணிப்புகளை விளக்கும் ஒரு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தளம் ஆகும்.
சித்தர் இயல் நாட்காட்டி
12,600 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் நிலா காலண்டர் (காலந்தெறி) பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.
முதலாம் நீருழியில் குமரிக்கண்டம் மூழ்கிய போது, பெரும்பான்மையோர் காவடியில் எதை எடுக்க முடியுமோ அதை எடுத்துக்கொண்டு, கால்நடைகளுடன் நடந்தே இலங்கை வந்தார்கள். உணவுக்காக வேளாண்மை செய்ய ஆரம்பித்த போது, சூரிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது. சூரிய நாட்காட்டியில் சூரியனின் நகர்வு தெரியாது. எனவே, ஆதி ஓரையைக் கணக்கில் கொண்டு, தென் கதிர் திருப்ப நாளில் ஆதி ஓரை காலை 5:30 மணிக்குக் கிழக்குத் தொடுவானில் எழுந்த பொழுது சித்திரை-1 என முருகனால், சூரியனின் நகர்வு அறிய, முதல் சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த சித்தர் ஓரை இப்பொழுது தென் கதிர் திருப்ப நாளில் மாலை நேரம் 6:00 மணிக்கு உதிக்கிறது. 180 திகிரி சூரியன் நகர்ந்து விட்டதால் இந்த நிகழ்வு. இதை இரண்டாம் ஊழிக்குப் (பூம்புகார் கடலில் மூழ்கியது), பிறகு தமிழ் சித்தர்கள் சித்தர் ஓரையை மையமாகக் கொண்டு நாட்காட்டி இருந்தால் மாதங்கள் தப்புகின்றது என 4000 ஆண்டுகளுக்கு முன்னால், திருச்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர் திருமாலால், சித்தரியல் நாட்காட்டி திருத்தப்பட்டது.
அப்பொழுது சமநாளில் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரம் வானில் எழுந்தது. அதை ஆரம்பப் புள்ளியாக வைத்து திருமாலால் ராசிகள் உருவாக்கி பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. எனவே, சமநாளில் சித்திரை-1 என சூரிய நகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுக்கும் ஒரு கரணம் என்றும், அந்த 60 ஆண்டுகள் 27 யோகம் என ஒவ்வொரு 800 நாட்களை ஒரு யோகமாக்கினார். கார்த்திகை நட்சத்திரத்தை ஆரம்பப் புள்ளியாக்கி கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் சேர்த்து ரிசப ராசியாக முதல் ராசியாக்கினார். இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சூரியன் பின் நோக்கி நகர்ந்து மேச ராசியை கடந்ததால் நம் சித்தர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் காலப் புரசனாக மேச ராசியை மாற்றி அமைத்தனர். இப்பொழுது மேச ராசி பின் நகர்ந்து வானில் தன் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் கொடிக் கம்பத்திலிருந்து முதல் ராசியாக மீன ராசி வந்து விட்டது. எனவே கால ஓட்டத்தில் தற்பொழுது, சித்தரியல் நாட்காட்டியை முறைப்படுத்தித் திருத்த வேண்டும். மீண்டும் சமநாளில் சித்திரை-1 ஆரம்பித்து ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுக்கும் ஒரு முறை நாம் சித்திரை-1 ஒரு தேதியை முன் நகர்த்தி திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சிதான் நம் சித்தர் இயல் நாட்காட்டி ஆகும்.
கர்ப்போட்டம் குறிப்பு மற்றும் கணிப்பு
கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள். வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும். காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும்.
- வானம் தெளிவாக இருக்கிறது.
- சிதறலான வெண்மேகம்
- கும்பலான வெண்மேகம்
- ஓடும். கருமேகம்
- நிற்கும் கருமேகம்
- கருமேக மூட்டம்
- சாரல்
- தூரல்
- உழவு மழை
- கடும் மழை
நீங்கள் பார்க்க போகும் கர்போட்டம் மழையை மட்டும் கணிப்பதற்கல்ல, ஆறு மாதத்திற்க்கான வெய்யில், மழை, பனி போன்ற அனைத்து காலநிலைகளையும் ஆறு மாதத்திற்க்கு முன் கூட்டியே அறிந்துகொள்ள முடியும். மேலும் அடுத்தடுத்து துல்லிய வானிலை கணிப்புக்கு நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மிகப்பெரிய படிப்பினையை நாம் துல்லியமாக கற்றுக்கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு இந்த முறையான பாடத்தை கடத்த வேண்டிய பொறுப்பும் நம்மிடம் உள்ளது. இந்த மாபெரும் பணியில் செயல்பட்டு பயனடையுங்கள்.
யாருக்கு இந்த தளம்?
- தமிழர் பாரம்பரிய ஆராய்ச்சியாளர்கள்
- ஜோதிடம் மற்றும் கால கணிப்பு ஆர்வலர்கள்
- மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
- பஞ்சாங்கம் பயன்படுத்துபவர்கள்
- தமிழ் கலாசாரத்தில் ஆர்வம் கொண்டவர்கள்
இந்த தளத்தை எப்படி பயன்படுத்துவது?
இந்த தளத்தில் உள்ள தினசரி நாட்காட்டி, மாதாந்திர பார்வை மற்றும் வருசம் நாட்காட்டி, சோதிடம், வலைப்பதிவு, சிவவாக்கியம் பகுதிகளை பயன்படுத்தி காலநிலை மாற்றங்கள், ராசி நிலைகள் மற்றும் பாரம்பரிய கால கணிப்புகளை அறிந்து கொள்ளலாம். கர்ப்போட்டம் குறிப்பு பகுதியை பயன்படுத்தி வானிலை அடையாளங்களை பதிவு செய்து காலநிலை முன்கணிப்பை புரிந்துகொள்ளலாம்.
எங்கள் நோக்கம்
தமிழர் கால அறிவை தெளிவாக விளக்குவது, வரலாற்று அடிப்படையில் வழங்குவது, அறிவியல் பார்வையில் புரியவைத்தல் மற்றும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்குவது என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.
sidhariyal.org என்பது வெறும் நாட்காட்டி தளம் அல்ல; இது தமிழர் கால அறிவியலை மீண்டும் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சி. பாரம்பரியமும் அறிவியலும் இணையும் இடமே இந்த தளம்.
ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்கள்
இந்த தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் மற்றும் சிவவாக்கியம், சித்தர் மரபு குறிப்புகள், நட்சத்திர கணிப்பு முறைகள் மற்றும் காலநிலை அவதானிப்பு பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. பாரம்பரிய அறிவையும் நவீன அறிவியல் பார்வையையும் இணைத்து விளக்க முயற்சி செய்கிறோம்.
🏠 முகப்பு
Please select an option below.