சிவவாக்கியம் பாடல் 266 – ஒன்றை ஒன்று
266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும், மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும், பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல் அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே!
சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்
264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு
287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே !
சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்
263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று
286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி
262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்
261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே !
சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்
261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே !
சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்
260. எட்டும் எட்டும் எட்டுமாய் , ஓர் ஏழும் ஏழுமாய் எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே. எட்டு மாய பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே ! எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே!
சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்
259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே!
சிவவாக்கியம் பாடல் 258 – ஐந்தும் ஐந்தும்
258. ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் , அல்லவற்றுள் ஆயுமாய், ஐந்து , மூன்றும், ஒன்றுமாகி நின்ற ஆதி தேவரே. ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்து நின்ற நீ, ஐந்தும் ஐந்தும் மாயன் உண்மை யாவர் காண வல்லரே!
சிவவாக்கியம் பாடல் 257 – மூன்று முப்பத்தாறினோடு
257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய், மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய், தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய், என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே.