Sidhariyal

திருக்குறள் – எண்ணென்ப ஏனை (திருக்குறள்)

Posted on மார்ச் 5, 2026

திருக்குறள் – எண்ணென்ப ஏனை
அனைவருக்கும் வணக்கம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. என்பது திருவள்ளுவரின் கூறள். எண்ணைத்தான் எழுத்துக்கு முதலில் கூறியுள்ளார். எண்களால் ஆனது தான் இவ்வுலகு – இந்த பால் வெளி (milky Way) கணக்குகளைத்தான் முப் பால் ஆக தந்துள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால் அறம் மறம் சார்ந்த வாழ்வியலுக்குச் சொந்தக்காரன் முருகன். குமரிக்கண்டம் மூழ்கிய போது அனைவரையும் காவடியுடன், கால்நடைகளையும் கரை சேர்த்தவன். பார்க்கும் அனைத்துப் பொருள்களும் சிவம். அனைத்துப் பொருட்களும் இயங்குவது சக்தியால் . பொருட்பால் சிவத்தைக் குறிப்பது. இன்பத்துப் பால் கலிகாலத்திலும் இன்பமாக வாழ்வது எப்படி என்பதை கீதையாக உபதேசித்த கருத்தினனை (கருப்பண்ணன்) குறித்து அவன் காலத்தை குறிப்பது. அறத்துப் பால் – 38 பொருட்பால் – 70 இரண்டையும் கூட்டினால் 108. அறத்துப்பால் – 38 இன்பத்துப் பால் – 25 இரண்டையும் கூட்டினால் 63 நாயன்மார்கள். இது மட்டுமல்ல 133 அதிகாரங்கள் , முப்பால் களின் எண்கள் அனைத்தும் சூரியச் சுற்றின் ஆண்டு கணக்குகள் சூரியன் நம் அண்டத்தில் ஒரு ஒழுங்கில் சுற்றிக் கொண்டு இருக்கும் கணக்குகள் தான் திருக்குறளின் எண்கள்.
Related Posts