Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து

246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே!

சிவவாக்கியம் பாடல் 245 – ஆதி கூடு

245. ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே சோதி ! மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி ! ஆதி கூடி நெற் பரித்து அ காரமாகி ஆகமம். பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே!

சிவவாக்கியம் பாடல் 244 – மூலமண்டலத்திலேயும் முச்சதுரம்

244. மூலமண்டலத்திலேயும் முச்சதுரம் ஆதியாய், நாலு வாசல் எம்பிராண் நடு உதித்த மந்திரம். கோலி எட்டு இதழுமாய், குளிர்ந்தழர்ந்த தீட்டமாய், மேலும் வேறு காண்கிலேன், விளைந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 243 – பேய்கள் பேய்கள்

243. பேய்கள் பேய்கள் என்கிறீர், பிதற்றுகின்ற பேயர்காள்! பேய்கள் பூசை கொள்ளுமோ! பிடாரி பூசை கொள்ளுமோ! ஆதி பூசை கொள்ளுமோ! அநாதி பூசை கொள்ளுமோ! காயமான பேயலோ! கணக்கறிந்து கொண்டதே!

சிவவாக்கியம் பாடல் 242 – காயிலாத சோலையில்

242. காயிலாத சோலையில் கனி புகுந்த வண்டுகால். ஈ இலாத தேனை உண்டு, ராப்பகல் உறங்குறீர். பாயிலாத கப்பல் ஏறி அக்கரைப் படும் உன்னை! வாயினால் உரைப்பதாகும் ஓம் மௌன ஞானமே!

சிவவாக்கியம் பாடல் 241 – வஞ்சகப் பிறவியை

241. வஞ்சகப் பிறவியை , மனத்துலே விரும்பியே ! அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்! வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல். அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ளள் ஆகுமே!

சிவவாக்கியம் பாடல் 239 – சட்டையிட்டு மணி

239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே… பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே….. நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்…. பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே….

சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!

238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ ! சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ! முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ ! அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!.

சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள். தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ? வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல், திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ?

சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப

235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே!

சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே, உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல், குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும், பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே!

சிவவாக்கியம் பாடல் 233 – ஊரிலுள்ள மனிதர்கால்

233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே! தேரிலே வடத்தை இட்டு , செம்பை வைத்து இழுக்கிறீர். யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை, கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!…