சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்
202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில், ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம். அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே!
சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ
201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே!
சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்
200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்
199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள். அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள். அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க
198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும், சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும், பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும், சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே!
சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்
197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!
சிவவாக்கியம் பாடல் 196 – அல்லிறந்து பகலிறந்து
196. அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய் அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய் சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச் சொல்லியாற வின்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!
சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்
196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
சிவவாக்கியம் பாடல் 195 – பொய்க்குடத்தில் திளைத்
195. பொய்க்குடத்தில் திளைத் தொதுங்கி போகம் வீசுமாறு போல் , இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே. அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல், இச்சடம் சிவத்தை மொண்டு அகம் அமர்ந்து இருப்பதே!!
சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே
194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!
நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி …