சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்
50. சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்
மெய்க்குருக்கானதும் வேணபூசைசெய்வதும்
சற்குருக்களானதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்களானதும், திரண்டுருண்ட தூமையே.
சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை
49. தூமை, தூமை, என்றுலே , துவண்டலையும், ஏழைகாள்?
தூமையான பெண் இருக்க, தூமை போனதெவ்விடம்.
ஆமை போல , முழுகி வந்து, அனேக வேதம், ஓதுறீர்.
தூமையும், திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே?
சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த
48. தரையினிற் கிடந்த போது, அன்று தூமை என்கிறீர்.
துறையறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்,
பறை அறைந்து, நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்,
முறையில்லாத ஈசரோடு பொருந்துமாறு எங்கனே?
சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்
47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா !
உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா!
விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா!
இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!.
சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?
46. சாதி ஆவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்,
பூதவாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை , கம்பி, பாடகம், பொன், ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற, தன்மை என்ன தன்மையே!.
சிவவாக்கியம் பாடல் 45 – சித்தம் அற்று
45. சித்தம் அற்று, சிந்தை அற்று, சீவன் அற்று நின்றிடம்.
சக்தி அற்று , சம்பு அற்று, சாதி பேதமற்று நல்.
முக்தி அற்று, மூலம் அற்று மூலமந்திரங்களும்,
வித்தை, வித்தை, ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?
44. சித்தம் ஏது? சிந்தை ஏது? சீவன் ஏது? சித்தரே!
சக்தி ஏது? சம்பு ஏது ? சாதி பேதமற்றது.
முக்தி ஏது ? மூலம் ஏது? மூல மந்திரங்கள் ஏது?
வித்தில்லாத வித்திலே ! இன்னதென்று இயம்புமே!.
சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு
43. அம்பலத்தை அம்பு கொண்டு, அசங்கென்றால், அசங்குமோ?
கம்பமற்ற பாற்கடல், கலங்கென்றால் , கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும், வந்து அனுகுமோ?
செம்பொன், அம்பலத்துள்ளே , தெளிந்ததே சிவாயமே !.
சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்
42. பிறப்பதற்கு முன்னெலாய், இருக்குமாறு தெங்கனே?
பிறந்து மண், இறந்து போய், இருக்குமாறு தெங்கனே?
குறித்து நீர சொல்லாவிடில், குறிப்பு இல்லாத மாந்தரே?
அறுப்பனே செவி இரண்டும் ஐந்து எழுத்து வாளினால்.
சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்
41. ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் எச்சில்,
போதகங்கள் ஆன எச்சில், பூதலங்கள் ஏழும் எச்சில்,
மாதிருந்த விந்து எச்சில், மதியும் எச்சில், ஒளியும் எச்சில்.
ஏதில் எச்சில் இல்லதில்லை,, இல்லை, இல்லை இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை
40. வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர்.
வாயிலே குதப்பு வேதம், என படக் கடவதோ?
வாயில் எச்சில் போக வென்று, நீர் தனைக் குடிப்பீர்காள்?
வாயில் எச்சில் போன வன்னம், வந்திருந்து சொல்லுமே!.
சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?
39. பறைச்சி ஆவது ஏதடா? பணத்தி ஆவது ஏதடா?
இறைச்சிதோறும், எலும்பினோடும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம், வேறெதோ? பணத்தி போகம் வேறெதோ?
பறைச்சியும், பணத்தியும் , பகுத்துப் பாரும் உம்முள்ளே !.