சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்
214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் . கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம். அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம். குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே!
சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்
213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!. ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே.
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை
காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை ஆக குமரிக்கண்டம் மூழ்கிய போது நம்மை காவடியுடன் நடந்தே அழைத்து வந்த முருகன் உருவாக்கிய ஆதி ஓரையில் இருந்த திருவாதிரை விண்மீனை ஆரம்பப் புள்ளியாக க…
நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.
இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை.
சிவவாக்கியம் பாடல் 212 – உயிர் அகத்தில்
212. உயிர் அகத்தில் நின்றிடும், உடம்பெடுத்ததற்கு முன். உயிர் அகாரமாகிடும் உடல் உகாரமாகிடும். உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பதச்சிவம். உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன்.
சிவவாக்கியம் பாடல் 210 – அஞ்செழுத்தின் ஆதியாய்
210. அஞ்செழுத்தின் ஆதியாய் அமர்ந்து நின்றது ஏதடா? நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதான தேதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் விரித்துரைக்க வேணுமே!
சிவவாக்கியம் பாடல் 209 – அஞ்சும் அஞ்சு
209. அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு அல்லல் செய்து நிற்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!
கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா?
கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறத…
சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது
208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!!
குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. வேறொரு குழுவில் வந்த பதிவு.
குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. கற்போட்ட தரவுகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் தங்களை சுற்றி உள்ள ஒரு மூன்று கிலோமீட்டர் அளவிற்கான இடத்தின் துல்லியமான வானிலைகளை நாம் கணிக்க முடியும் என்றும்…
சிவவாக்கியம் பாடல் 206 – அணுத் திரண்ட
206. அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து வல்லி யோனியாய் மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர். சனிப்பது ஏது? சாவது ஏது? தாபரத்தின் ஊடு போய் நினைப்பது ஏது ?நிற்பது ஏது ? நீர் நினைந்து பாருமே!
சிவவாக்கியம் பாடல் 205 – அழுக்கறத் தினங்குளித்து
205. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே! அழுக்கிருந்த தெவ்விடம்? அழுக்கிலாதது எவ்விடம்? அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே!