சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்
224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர். நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே. எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால், தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே!
சிவவாக்கியம் பாடல் 223 – விழித்த கண்
223. விழித்த கண் குவித்த போது, அடைந்த ஓர் எழுத்தெலாம் , விளைந்து விட்ட இந்திரசால வீடதான வெளியிலே, அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே!
சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை
222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய். துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய். அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே ! ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே.
சிவவாக்கியம் பாடல் 221 – வானிலாதது ஒன்றுமில்லை
221. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே
தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.
தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. கத கத – கதகதப்பு, சூடு, கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு கரகர – காய்ந்து இருத்தல் கம கம – மணம் வீசுதல் கண கண – உடம்புச் சூடு கசகச – வியர்த்தல் கலகல – சிரிப்பு கதகத …
சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்
220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே.
இன்றைய பாடம் – உறவுகள் ராசிகள்.
சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்
219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ? செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும். சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே?
சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே
218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய், உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன். மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம். சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 217 – வெந்த நீறு
217, வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் . சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம். முந்து மந்திரத்திலோ? மூலமந்திரத்திலோ? எந்த மந்திரத்திலோ ? ஈசன் வந்து இயங்குமே!
சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி
216. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய் சிறியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ… விரிவதென்று வேறு செய்து வேடமிட்ட மூடரே! அறிவினோடு பாரும் இங்கு, அங்கும் இங்கும்ஒன்றதே!
சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்
215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?. உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!….