Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

106. ஆதியானது ஒன்றுமே, அனேக அனேக ரூபமாய், சாதி பேதமாய் எழுந்து, சர்வ சீவன் ஆனபின், ஆவியோடு ஆடுகின்ற , மீண்டும் அந்த சென்மமாம், சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பரே !

சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்

105. அல்லல் வாசல் ஒன்பதும், அறுத்தடைந்த வாசலும், சொல்லும் வாசல் ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும். நல்ல வாசலைக் திறந்து, ஞான வாசல் ஊடு போய், எல்லை வாசல் கண்டவர், இனி பிறப்பதில்லையே!.

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே

104. ஓம் நமசிவாயமே , உணர்த்தும் மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் தெளிந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உட்கலந்து நிற்குமே!

சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்

103. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும் வெளியிலே பிதற்றலாம், விளைவு நின்றதில்லையே! வெளி பறந்த தேகமும், வெளிக்குள் மூல வித்தையும், தெளியும் வல்ல ஞானிகள், தெளிந்திருத்தல் தின்னமே !.

சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி

102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம், வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன். தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம், வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.

சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்

101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன், நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும், பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும். பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!.

சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு

100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா ! கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும், சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே, வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்

99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும், நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும், நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே! நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே.

சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே

98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே! ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார், ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே, பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!.

சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று

97. வட்டம் என்று உம்முளே மயக்கி விட்டது இவ்வெளி, அட்டரக் கரத்துளே, அடக்கமும், ஒடுக்கமும், எட்டும் எட்டும் எட்டுமாய், இயங்கு சக்கரத்துளே, எட்டலாம் உதித்த எம்பிரானை நாமறிந்த பின்.

சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்

95. சோருகின்ற பூதம் போல், சுணங்கு போல் கிடந்த தீ , நாறுகின்ற கும்பியின் நவின்றெழுந்த , மூடரே! சீறுகின்ற ஐவரை சினக்கருக்க வல்லீரேல், ஆறு கோடி மேனியார் , ஆறில் ஒன்றில் ஆவரே!.

சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே

94. மூன்று மூன்று மூன்றுமே, மூவர் தேவர் தேடிடும், மூன்றும், அஞ்சு எழுத்துமாய், முழங்கு மவ் எழுத்துலே! ஈன்ற தாயும் அப்பனும் , இயங்குகின்ற நாதமும், தோன்றும் மண்டலத்திலே , சொல்ல வெங்கும் தில்லையே!.