சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?
69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ? பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ? தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ? வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?.
சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல
68. உருவும் அல்ல ,வெளியும் அல்ல, ஒன்றை மேவி நின்றதல்ல. மருவு வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல , அற்றதல்ல. பெரியதல்ல , சிறியதல்ல, பேசலான தானுமல்ல, அறியதாகி நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே!
சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்
67. சிவாயம் என்ற அக்சரம், சிவன் இருக்கும் அக்சரம். உபாயம் என்று நம்புதற்கு , உண்மையான அக்சரம். கபாடமற்ற வாயிலை, கடந்து போன வாயுவை. உபாயமிட்டு அழைக்குமே, சிவாய அஞ்செழுத்துமே!
சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்
66. ஐம்பத்தொன்றில் அக்கரம், அடங்கலோர் எழுத்துமோ, விண் பறந்த மந்திரம், வேதம் நான்கும் ஒன்றலோ? விண் பறந்த மூல அஞ்செழுத்துலே, முளைத்ததே. அங்கலிங்க பீடமாய், அமர்ந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும
65.இருக்க வேணும என்ற போது, இருக்கலாய் இருக்குமோ! மறிக்க வேணும் என்றலோ? மண்ணுலே படைத்தன. சுறுக்கமற்ற தம்பிரான், சொன்ன அஞ்செழுத்தையும், மறிக்கு முன் வணங்கிடீர், மருந்தெனப் பதம் கெடீர்.
சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி
64. மூல நாடி தன்னிலே, முளைத்தெழுந்த சோதியை, நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின், பாலராகி வாழலாம், பறந்து போக யாக்கையும், ஆலம் உண்ட கண்டர் ஆனை, அம்மை ஆனை உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி
63. உழலும் வாசலுக்கிறங்கி, ஊசலாடும் ஊமைகாள், உழலும் வாசலைத் திறந்து, உண்மை சேர எண்ணுவீர். உழலும் வாசலைத் திறந்து, உண்மை நீர் உணர்ந்த பின், உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!
சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற
62. கண்டு நின்ற மாயையும், கலந்து நின்ற பூதமும், உண்டு உறங்குமாறு நீர, உணர்ந்து இருக்க வல்லீரேல். பண்டை ஆறும் , ஒன்றுமாய், பயந்த வேத சுத்தனாய், அண்ட முக்கி ஆகி நின்ற, ஆதி மூல மூலமே.
சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி
61. கழுத்தையும் நிமிர்த்தி, நல்ல கண்ணையும் விழித்து நீர், பழத்தவாய் விழுந்து போன , பாவம் என்ன ? பாவமே! அழுத்தமான வித்திலே, அனாதியாய் இருப்பதோர், எழுத்திலா எழுத்திலே ! இருக்கலாம், இருந்துமே !
சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்
61.கருவிருந்த வாசலால், கலங்குகின்ற ஊமைகாள் , குருவிருந்து சொன்ன வார்த்தை, குறித்து நோக்க வல்லீரேல். ‘உருவிலங்கு மேனியாகி, . உம்பராகி நின்று நீர், திரு விலங்கு மேனியாகி , சென்று கூடலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்
60.மையடர்ந்த கண்ணினால், மயங்கிடும் மயக்கிலே| ஐயிறந்து கொண்டு நீங்கள், அல்லல் அற்று இருப்பீர்காள், மெய்யடர்ந்த சிந்தையால், விளங்கு ஞானம், எய்தினால், உய் அடர்ந்து கொண்டு , நீங்கள் ஊழி காலம் வாழ்வீரே!
சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ
59. அண்டம் நீ , அகண்டம் நீ . ஆதிமூலம் ஆன நீ, கண்டம் நீ,கருத்து நீ , காவியங்கள் ஆன நீ, பூண்டரீக மற்றுளே, புணருகின்ற புன்னியர், கொண்ட கோலம், ஆன நேர்மை, கூர்மை என்ன கூர்மையே!.