Sidhariyal

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது? (திருவிழா)

Posted on பிப்ரவரி 6, 2026

தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? எப்பொழுது? இப்பொழுது தென்மேற்கு பருவக்காற்று வீசிக்கொண்டு உள்ளது. இனி வரும் அமாவாசையிலிருந்து காற்று வளியாக நின்று வரும் கார்த்திகை பௌர்ணமியில் இருந்து காற்று திரும்பி வட கிழக்கில் இருந்து வீசும். இதை நாம் பட்டம் விட்டு சரி பார்ப்போம். இந்த காற்று திரும்பப் போகும் நிலையை அறிவிக்கும் வரும் அமாவாசையை நாம் தீபாவளியாக ஆரம்பித்து கார்த்திகை பௌர்ணமியை வெட்ட வெளிகளில் தீபம் ஏற்றி இந்த காற்று மாற்றத்தை கண்கானிப்போம். எனவே வரும் Oct – 1 ம் தேதி ஐப்பசி 9-ம் தேதி இரவு அமாவாசையை தீபாவளியாக கொண்டாட வேண்டும். Oct – 2 ம் தேதி புதன் கிழமை காலை வெயிலுக்கு இதமாக எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து இந்த வளி மாற்றத்தை வரவேற்கத் தயாராவோம். Oct-1 இரவு 11.42 லிருந்து oct – 2 – இரவு 12.12 வரை அமாவாசை. இந்த நேரத்தில் திபாவளி கொண்டாடலாம். வரும் அமாவாசை சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் காணமுடியாது. ஏனெனில் இரவு – 12.12 மணிக்கு நடப்பதால் நமக்கு இரவாக இருப்பதால் நமக்குத் தெரியாது. போன புரட்டாசி மாதம் பெரும்பாலான உயிரினங்களின் இனப் பெருக்க காலம். அதனால் தான் புரட்டாசியில் நாம் இறைச்சி தவிர்த்து இந்த அமாவாசையில் இறைச்சி சாப்பிட்டு தீபாவளியை எதிர்கொள்வோம். Aug -21 – லிருந்து Sep – 21 வரை நம் கிராமங்களில் நாய்கள் கூட்டமாக அலைந்ததை பார்த்தவர்களுக்குத் தெரியும், போன புரட்டாசி இனப்பெருக்க காலம் என்று.
Related Posts