Sidhariyal

Elango: ஆங்கிலப்புத்தாண்டு டிசம்பர் 22 லேயே தொடங்கியிருக்க வேண்டும் போல - December 25, 2024 (திருவிழா)

Posted on பிப்ரவரி 9, 2026

ஆங்கில புத்தாண்டு ஜனவரி – 1 – ல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. 12, 800 ஆண்டுகளுக்கு முன்னால் நீரூழியில் குமரிக் கண்டம் மூழ்கிய போது கதிர் திருப்ப நாள். ஜனவரி – 1 -ல் தான் இருந்தது. ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை கதிர் திருப்ப நாள் Dec-31 Dec-30 Dec-29 என மாறி மாறி இன்று Dec-22- ல் உள்ளது. இதற்கு காரணம் கருமைய (சக்தி மைய ) பின் சுழற்சி ஒரு திகிரி நகர ஆகும். காலம் 1330 ஆண்டுகள் ஆகும். இதை கொடி மரத்தை கருவறையிலிருந்து வான் பார்த்தால் மற்றும் நிழல் குறித்தால் புரிந்து கொள்ள முடியும். 500 வருடங்களுக்கு முன்பு வரை பூமி உருண்டை என தெரியாதவர்களுக்கு இந்த கணக்குகள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நம் சித்தர்கள் தான் யாராவது அவர்களுக்கு இந்த நாட்காட்டியை உருவாக்கித் தந்து இருக்க வேண்டும். எப்பொழுது கதிர் திருப்ப நாள் Dec-25-ல் இருந்ததோ? அப்பொழுது இந்த உலகம் கலியுக கட்டுப்பாட்டில் வந்ததைத்தான் அவர்கள் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது மீனராசியில் நம் சூரியன் (சோதி) சம நாளில் தெரிவதால் முதலாம் நீ௹ழியில் 6 ராசிக்கு முன்னால் சிம்ம ராசியில் இருந்து இருக்கிறது. சூரியன் ஒரு திகிரி நகர இப்பொழுது 60 சுழல் ஆண்டுகளாக இருக்கிறது. சூரியனின் ஒரு சுற்றுக்கு சராசரியாக சக்திமைய பின் சுழற்சி ஒரு திகிரி நகர 72 ஆண்டுகளாக இருக்கிறது. அப்படி 12,800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமநாள் ஏப்ரல் – 1 -ல் இருந்தது. இப்பொழுது அது march – 20 வரை வந்து விட்டது. இதை கருத்தில் கொண்டு தான் ஏப்ரல் -1 ஐ முட்டாள்கள் தினமாக்கி இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இனி கதிர் திருப்ப நாள் Dec-23 Dec-24 Dec-25 என ஒவ்வொரு 1330 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்.
Related Posts