சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர், மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும்.
சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?
150. பிணங்குகின்றதேதடா? பிரங்ஙை கெட்ட மூடரே? பிணங்கிலாத பேரொளி , பிராணனை அறிகிலீர். பிணங்குமோ? இரு வினை, பிணக்கறுக்க , வல்லீரேல். பிணங்கிலாத பெரிய இன்பம், பெற்றிருக்கலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல். ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும், தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும். கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே!
சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு
148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே, அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை, வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட, செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே!
சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே
147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை, காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல். பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம், ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே!
கர்ப்போட்ட காலம், கேட்டை நல் சித்திரம் – சித்திரை – 1
கடந்த 1800 ஆண்டுகளாக , கலிகாலத்தின் கோரப் பிடியில் இருந்த தமிழகத்தில் , நம் பாட்டன்கள் எவ்வளவு இன்பமாக , இயற்கையை புரிந்து கொண்டு , எளிமையாக வாழ்ந்து , எழுச்சியான வீரத்துடன், இயற்கையான சூழலில், இயற்கையை எப்படி கவனிக்க வேண்டும் என…
மகர சங்கராந்தி
நம் நடைமுறையில் உள்ள திருத்தப் படாத நாட்காட்டி , 24 + 6 = 30 நாட்கள் பின் தங்கி உள்ளது போல் ஆங்கில நாட்காட்டியும் 6 நாட்கள் பின் தங்கி உள்ளது. 425 ஆண்டுகளுக்கு முன்னாள் அவர்கள் நாட்காட்டியில் 10 நாட்களை கூச்சமில்லாமல் நகர்த்தி விட்டு மறு…
சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்
146. சாவல் நாலும் , குஞ்சதஞ்சும், தாயதானவாரு போல், காவலான கூட்டிலே, கலந்து சண்டை கொள்ளுதே!.. கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின், சாவல் நாலும் குஞ்சதஞ்சும், தானிறந்து போனதே!
சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்
145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல், மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள். மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை, ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை, ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ? சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர். பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ! தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே ! கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே!
சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும், இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம், மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று, சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே!