Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு

சிவவாக்கியம்

Posted on ஜனவரி 29, 2026

232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே!
232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே! எள். இரும்பு, கம்பிளி, ஆடையாக இடும் பருத்தி, வெண்கலம் என அனைத்துப் பொருட்களிலும், அணுக்களாக இருக்கும் நாதனுக்கு ஆடை மாடை வச்திரம் அணிந்து கொண்டாடுவதை விட நம் உடலில் நாம் உண்ட உணவை செரித்து ஆற்றலாக வேதி மாற்றம் செய்யும் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு உற்றதான உணவை மட்டும் கொடுத்து வாழ்ந்தால் நமக்கு மெல்ல வந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts