Sidhariyal

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 29, 2026

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. அதில் அண்டார்டிக்கா எனும் தென் துருவத்தில் பனிமலைகள் 3 கி.மீ உயரத்திற்கு ஆயிரக்கனக்கான கி.மீ சுற்றளவுக்கு இருக்கும். ஆனால் வடக்கில் உள்ள ஆர்க்டிக் பிரதேசத்தில் பனிக் கட்டிகளின் அளவு 3 மீட்டர், முதல் 7, 8 மீட்டர்கள் தான் இருக்கும். இதற்குக் காரணம் பூமியின் இந்த 10 திகிரி சாய்வு தான். வடக்கு தெற்கு பூமியின் அச்சு சூரிய 23.5 திகிரி சாய்ந்த சுற்றுக்கு 10 திகிரி சாய்வில் பூமி சுழன்று கொண்டு உள்ளது. இதை ஒரே நாள் நிழல் குறித்தால் புரிந்து கொள்ள முடியும். நிழலின் முனையை குறித்துக் கொண்டே வந்தால் காலையில் 5 திகிரி சாய்வான ஒரு கோடு கிடைக்கும். இதே மதியத்திலிருந்து தெற்கு நோக்கி சாய்ந்த ஒரு கோடு கிடைக்கும். அந்த நிழல் வடக்கில் உயர்ந்தும் தெற்கில் தாழ்ந்தும் இருக்கும். நில நடுக் கோட்டில் என்று சூரிய உதயம் என்று சரியாக சொல்லிவிட முடியும். எப்படி? கதிர் திருப்ப நாள் இரண்டையும் சரியாக குச்சி நட்டு நிழல் குறித்தால் அந்த இரண்டு புள்ளிகளை இணைத்து ஒரு கோடு போட்டு சரியான நடுப்புள்ளியை குறித்துக் கொண்டு , அந்த புள்ளியில் என்று சூரியன் எழுகிறதோ அன்று தான் சமநாள் என்பது. இதை யார் வேண்டுமானாலும் அவரவர் தோட்டங்களில் , வீடுகளில் குச்சி நட்டு நிழல் கவனித்து அறிந்து கொள்ளலாம். அந்த சமநாளில் என்று சூரியன் எழுகிறதோ அன்று தான் சித்திரை – 1 . இன்னும் 56 வருடங்களுக்கு. இப்படி 10 வருடங்களாக குச்சி நட்டு நிழலை அவதானித்தும் , ராசிகளின் ஓட்டங்களை வானில் அந்த குச்சியின் பின்புலத்தில் கவனித்தும், ஆதாரத்துடன் விளக்கினாலே, நான் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறேன் என்று சொல்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், குச்சி நட்டு நிழல் கவனித்து அந்த 23.5 திகிரி வட்பபாதையை புரிந்து கொள்வோம். அனைவரும் படித்த படிப்பை மறந்து நம் முன்னோர்கள் வடித்த பழைய கோயில்களின் வடிவமைப்பைப் புரிந்து கொள்ளுங்கள். கருவறைகளுக்கு முன்னாள் நின்று கொடி மரம், கோபுரங்களில் சூரிய எழுச்சியைக் கானுங்கள். மாலை வேலையில் நிலாவின் இடத்தை கொடி மரத்தின் reference-ல் பாருங்கள். அந்த நிழலை கவனித்தீர்கள் என்றால் சூரியன் உதயமாகி எழுந்து வானில் மேலேறி வருவதை எழுச்சி என்று நம் முன்னோர்கள் முக்கோனவியல் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை திரிகோண விதி என்பார்கள். அந்த எழுச்சியைத்தான் இவர்கள் Sin- தீட்டா என்பார்கள். இந்த சூரியனின் எழுச்சியால் குச்சியின் நிழல் தரையில் ஓடும் . அதை ஓட்டம் என்று நம் முன்னோர்கள் திரிகோண விதியில் சொன்னார்கள். அதை இவர்கள் Cos என்றார்கள். இந்த எழுச்சி, ஓட்டம் இரண்டினாலும் ஒரு சாய்வு கோணம் நிழலின் முனைக்கும் குச்சியின் முனைக்கும் கிடைக்கும். அதை சாய்வு என்றார்கள். அதை இவர்கள் Tan என்கிறார்கள். நம் கோயில்களில் நாம் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இவற்றை அவதானித்து விதிகளை அறிவித்து ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை வடித்து வாழ்வாங்கு வாழ்ந்து உள்ளார்கள். அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என நமக்கு அறிவுருத்தி இருக்கிறார்கள்.
Related Posts